அருள்மிகு ஸ்ரீ பாலமுருகன் திருக்கோவில்.
இக்கோவில் வேறெந்த கோவிலிலும் நடக்காத அதிசயமாக இம் மலைமீது காகங்கள் பறப்பதில்லை.
இம்மலையில் கோவில் கொண்டுள்ள முருகனுக்கு பால் அபிஷேகம் செய்தால் சிலமணித்துளிகளிலேயே அந்த அபிஷேக பால் தயிராக மாறுவது பக்தர்கள் அனைவரையும் அதிசயிக்க வைப்பதாக இருக்கிறது.
இத்தல முருகனுக்கு பூஜையின் போது மலர்கள் நைவேத்யம் தீபாராதனை பூஜை செய்யும் அர்ச்சகர் என அனைத்தும் 6 என்ற எண்ணிக்கையில் இருப்பது மேலும் சிறப்பாகும்.
பொதுவாக சிவனுக்கு தான் அன்னாபிஷேகம் செய்வது வழங்கம். முருகன் சிவனிலிருந்து தோன்றியதால் இவர் சிவ அம்சமாகிறார். எனவே இவருக்கும் அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது.
மேலும் இங்கு முருகன் பால வடிவில் இருப்பதால் கந்த சஷ்டியின் போது சூரசம்ஹாரம் நடைபெறுவதில்லை.
ரத்னகிரி.
திருமணிக்குன்றம்.
வேலூர் மாவட்டம்.
0 Comments: