ஓங்கி உயர்ந்த மரங்கள் தாங்கி படந்த வனம்
உன்னாட்சி தாயே ராக்காயி அம்மன் தாயே
மதுரை அழகர்கோவில் தலை தாங்கிய பைரவித் தாயே உன் அருளாட்சி
ஸ்ரீபதினெட்டாம்படிகருப்பசாமி பாதசேவை காண ஓடுது புன்னியமான தீர்த்தம் தங்க ஆறு வந்து பாயுது
மயில் தோகை விரித்தாடும் பழமுதிர்சோலை முருகன் கோவிலில்
மந்திகளும் குதித்தாடும்
சிம்ம வாகனத்தில் கானகம் அம்மா உன் ஊர்கோலம் தினம் காணும்
கோபுரம் தாங்கிய உன் கோவில் அழகு
கொத்துமலர்கள் பூக்கும் உன் தோட்டமழகு
குலமகள்கள் தவமிருக்கும் உன் வாசல் அழகு
கோல முகத்தழகி அருட்கடைவிழியழகு கொஞ்சம் பார்த்திடம்மா வினைகள் வழிவிட்டு விலகும்
தூவானம் பன்னீர் தூவி சாரல் அடித்திடும்
பூவாத பூக்களும்
பூத்து தேனை சொரிந்திடும்
கூவாத குயில்கூட உன் பெயரை பாடிடும்
பதினெட்டாம்படியன் காடும் அதிர்ந்திடும்
ராக்காயி அம்மன் ஆடும் ஆட்டம் வானம் இடி முழங்கிடும் ஸ்ரீபதினெட்டாம்படிகருப்பசாமி என்றும் காவல் நின்றிடுவார்
🙏🌹நல்லதே நடக்கும்🙏🌹
எங்கள் காவல் தெய்வம் ஸ்ரீ கருப்பசாமி 🌹🌹
0 Comments: