செவ்வாய், 26 நவம்பர், 2024

அழகர்கோவில் தீர்த்தக்கரை ஸ்ரீராக்காயி அம்மன்

அழகர்கோவில் தீர்த்தக்கரை ஸ்ரீராக்காயி அம்மன்


 ஓங்கி உயர்ந்த மரங்கள் தாங்கி படந்த வனம்
உன்னாட்சி தாயே ராக்காயி அம்மன் தாயே
மதுரை அழகர்கோவில் தலை தாங்கிய பைரவித் தாயே உன் அருளாட்சி
ஸ்ரீபதினெட்டாம்படிகருப்பசாமி பாதசேவை காண ஓடுது புன்னியமான தீர்த்தம் தங்க ஆறு வந்து பாயுது 
மயில் தோகை விரித்தாடும் பழமுதிர்சோலை முருகன் கோவிலில் 
மந்திகளும் குதித்தாடும்
சிம்ம வாகனத்தில் கானகம் அம்மா உன் ஊர்கோலம் தினம் காணும்
கோபுரம் தாங்கிய உன் கோவில் அழகு
கொத்துமலர்கள் பூக்கும் உன் தோட்டமழகு
குலமகள்கள் தவமிருக்கும் உன் வாசல் அழகு
கோல முகத்தழகி அருட்கடைவிழியழகு கொஞ்சம் பார்த்திடம்மா வினைகள் வழிவிட்டு விலகும்

தூவானம் பன்னீர் தூவி சாரல் அடித்திடும்
பூவாத பூக்களும்
பூத்து தேனை சொரிந்திடும்
கூவாத குயில்கூட உன் பெயரை பாடிடும்
பதினெட்டாம்படியன் காடும் அதிர்ந்திடும்
ராக்காயி அம்மன் ஆடும் ஆட்டம் வானம் இடி முழங்கிடும் ஸ்ரீபதினெட்டாம்படிகருப்பசாமி என்றும் காவல் நின்றிடுவார்

🙏🌹நல்லதே நடக்கும்🙏🌹

எங்கள் காவல் தெய்வம் ஸ்ரீ கருப்பசாமி 🌹🌹
Previous Post
Next Post

0 Comments: