தள்ளாட்டத்தை ஏற்படுத்தும் தலைசுற்றல்…!
ஒருவருக்கு தலைச் சுற்றல் என்றால் நாம் மிகவும் அஞ்சுவது மூளை தொடர்பான நரம்பு கோளாறாக இருக்குமோ என்பதுதான். ஆனால் அதற்கு முக்கிய காரணம் காதுகள் தான். உடலைச் சமநிலைப்படுத்த உதவும்.
தலைச்சுற்றலுக்கு முக்கிய காரணம் என்றால் அது காதுகள் தான்.
ஆனால்_மற்ற_காரணங்களாக……
ஒற்றைத் தலைவலி,
உயர் ரத்த அழுத்தம்,
குறை ரத்த அழுத்தம்,
மிகை ரத்தக்கொதிப்பு,
ரத்தசோகை,
ஊட்டச்சத்து குறைவு,
நீரிழிவு,
தாழ் சர்க்கரை,
கழுத்து எலும்பில் பிரச்சனை,
தைராய்டு பிரச்சனை,
கர்ப்பத்தின் ஆரம்பம்,
இதயத் துடிப்பு கோளாறுகள்,
மருந்துகள் பக்கவிளைவு,
பார்வை கோளாறு,
மன அழுத்தம்,
உறக்கமின்மை,
தலைக்காயங்கள்
மூளைக்கு செல்லும் ரத்தஓட்டகுறைவு,
மூளையில் கட்டிகள்,
ரத்த கசிவு,
கழுத்தெலும்பு கட்டிகள்,
தண்டுவட நோய்கள்,
கழுத்தெலும்பு தேய்மானம்
நரம்பியல் பிரச்சினைகளாலும்,
காக்காய் வலிப்பு நோயாலும்,
போன்றவற்றாலும் தலைசுற்றல் ஏற்படும்.
நன்றாகத்தான் இருப்பீர்கள். திடீரென தலை சுற்றுவது போலிருக்கும். கை நடுங்கும். கண்கள் இருட்டிக் கொண்டுவரும். இது நிறைய பேர் அனுபவித்திருப்பார்கள். இதற்கு பல காரணங்களை சொல்லலாம்.
குறைந்த ரத்த அழுத்தத்திலிருந்து ஹார்மோன் மாற்றங்கள் வரை எதுவாகவும் இருக்கலாம். சிலருக்கு கண்கள் இருட்டிக் கொண்டு காது அடைப்பது போல ஏற்படும். சில நிமிடங்களில் சரியாகிவிடும் இதற்கு வெர்டிகோ என்று பெயர். இது மெனோபாஸ் சமயங்கலில் பெண்களுக்கு அடிக்கடி ஏற்படுவதுண்டு.
இன்னும் சிலருக்கு தலை சுற்றும். காது அடைக்கும். இதயம் படபடவென அடைத்துக் கொள்ளும். பேச்சு திடீரென குளறும். இதற்கு ஒவ்வாமை காரணமாக இருக்கலாம்.
அல்லது காதுகளில் உண்டாகும் சம நிலையற்ற நிலையில் இவ்வாறு உண்டாகலாம். இன்னும் தீவிரமான நிலை என்னவென்றால் தலை சுற்றி சுய நினைவு இழப்பது. திடீரென ரத்த அழுத்தம் குறைவதால் உண்டாகும் நிலை இது. சிறிது உப்பு கலந்த நீர் குடித்தால் எழுந்து கொள்வார்கள்.
மிகவும் பாரமானதை தூக்கும்போது, அல்லது கீழே உட்கார்ந்திருந்து மேலே எழும்போது தலை சுற்றல் உண்டாகும். இதற்கு ரத்த சோகையும் ஒரு காரணமாக இருக்கலாம். சாப்பிடும் ஆன்டிபயாடிக் மாத்திரைகளால் பக்கவிளைவுகள் உண்டாகும். இதனால் கூட தலை சுற்றல் உண்டாகும். உடலில் நீரிழப்பு ஏற்படும்போது தலை சுற்றல் ஏற்படும்.
உடலுக்கு தேவையான எலக்ட்ரோலைட் குறைவதால், மூளையில் சரியான தகவல் பரிமாற்றம் நடக்காமலிருக்கும்போது தலைசுற்றல் உண்டாகும். தேவையான அளவு நீர் குடிக்கிறீர்களா என தெரிந்து கொள்ளுங்கள். சீரற்ற இதய துடிப்பு இருந்தால், ரத்தம் மூளைக்கு செல்வதில் பாதிப்பு உண்டாகும். உடனே தலை சுற்றல் உண்டாகும். வாய்வினாலும் தலை சுற்றல் உண்டாகும், வாய்வினால் வயிறில் அழுத்தம் தரப்படும்போது, நரம்புகளை பாதித்து தலை சுற்றுவது போலிருக்கும்.
இப்படி தலை சுற்றலுக்கு பல காரணங்கள் உண்டு.
அறிகுறிகள்:
தன்னை சுற்றியுள்ள பொருட்கள் எல்லாம் ஒரு சக்கரம் போல் சுழல்வதாக உணர்வார்கள்.
வாந்தி வருவது போல இருக்கும்.
நடப்பதிலும் தள்ளாட்டம் காணப்படும்.
நிற்பதிலும் சிரமமாக இருக்கும்.
மன நிலையில் ஒருவித அச்ச உணர்வு,
எதையும் சிந்திக்கும் எண்ணம் இல்லை,
மொத்தத்தில் ஒரு குழப்பமான சூழல் மனதில் ஏற்படும்.
இதனை மருத்துவத்தில் வெர்டிக்கோ என்று கூறுவார்கள்.
உள்காது நரம்பு மண்டலத்தால் வரும் தலைசுற்றலை பெரிபெரல் வெர்டிகோ என்று கூறுவார்கள்.
மனிதனின் உள்காதில் வட்டவடிவத்தில் கால்வாய் போன்ற பாதைகள் உள்ளன. இது சிறு குகைப்போல காணப்படும். இங்கிருந்து நரம்பு வருகிறது. இதில் ஏற்படும் அழுத்தத்தின் காரணமாக வரும் தலைசுற்றல் தான் பெரிபெரல் தலைசுற்று என்று அழைக்கப்படுகிறது.
இது போல நரம்பு மண்டலத்தில் சிறுமூளை பாதிக்கப்படுவதாலும் தலைசுற்றல் வரும்.
இவ்வாறு தலைசுற்றல் வருபவர்களுக்கு……
பேச்சு குழறும்,
எதிரில் உள்ள பொருட்கள் இரண்டு இரண்டாக தெரியும்.
கண் அசைதல்,மற்றும் அலசல்
நேர் கோட்டில் நடப்பதில் சிரமம்,
ஒரே இடத்தில் நிற்கவும் முடியாத நிலை
போன்றவை ஏற்படும்.
தலைசுற்றல் மயக்கம் வீட்டு மருந்துகள்.
மன அழுத்தத்தைத் தவிர்க்க வேண்டும். உணவில் உப்பை குறைத்துக்கொள்ள வேண்டும்,
அதிக கொழுப்புள்ள உணவைத் தவிர்க்க வேண்டும். சரியான அளவு ஓய்வும் உறக்கமும் அவசியம்.
புகைப்பிடித்தல், மது அருந்துதல் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். போதை மருந்துகளை தவிர்க்க வேண்டும்.
ஆண்டுக்கு ஒருமுறையாவது காது பரிசோதனை செய்வது அவசியம்.
படுக்கையைவிட்டு விசுக்கென்று எழாதீர்கள். முதலில் நன்றாக கண்ணைத் திறந்து பாருங்கள். பின்பு ஒரு பக்கமாக உடலைத் திருப்பி மெதுவாக எழுந்திருங்கம். இவ்வாறு செய்தால் தலைசுற்றல் குறையும்.
அதிக இனிப்பு, அதிக உப்பு உள்ள எந்த உணவையும் உண்ணக்கூடாது,
புகை, மது கூடவே கூடாது.
சிலருக்க பித்தத்தால் கூட தொடர் வாந்தி, மயக்கம், தலைசுற்றல் வரலாம். அதனால் துவர்ப்புச்சுவையுள்ள உணவுகளை அதிகம் சேர்த்துக்கொள்ளவேண்டும். தினம் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டாலே பித்தம் தொடர்பான தலைசுற்றல் நின்றுபோகும், நெல்லிக்காய் சாதம் செய்துகூட சாப்பிடலாம். நல்ல பலன் கிட்டும்.
கொத்தமல்லி விதையை கொதி நீரில் போட்டு ஊறவைத்து வடிகட்டி தினம் பருகினால் தலைசுற்றல் நிற்கும், கொத்தமல்லி துவையால், கறிவேப்பலை துவையலை தினமும் உணவுடன் சேர்த்து வர தலைசுற்றல் குறையும்.
சீரகத்தை வெறும் வாயில் போட்டு மென்று அதன் சாரை விழுங்கினால் அதன் சாரை விழுங்கினால் நல்ல பலன் கிடைக்கும்.
இஞ்சி சாறு தேன் கலந்து சாப்பிட்டால் வாந்தி, மயக்கம் நின்று தலைசுற்றல் நிற்கும். இஞ்சி மரப்பன் என்ற மிட்டாய்கூட இதற்கு மிக நல்லது. சுக்குகாப்பி இதற்கு சிறந்து மருந்து.
கொழுப்புசத்த உள்ள அசைவ உணவுகளை குறைத்துக் கொள்ள வேண்டும். மீன், கோழிக்கறி நல்லது. மற்றப்படி உப்புக் கருவாடு, அப்பளம் போன்றவை கூடவே கூடாது. நார்ச்சத்துள்ள காய்கறிகள், பழங்கள் அதிகம் சேர்ப்பது நல்லது.
பித்தம் அதிகரிப்பதால் ஏற்படும் தலைசுற்றலால்……
வாயில் கசப்பு அல்லது புளிப்பு ருசியும்,
புளித்த ஏப்பமும், வயிற்று உப்புசமும் ஏற்படலாம்.
கண்கள், உள்ளங்கை,
கால்களில் எரிச்சல் ஏற்படும்.
தூக்கமும் சரியாக வராது.
இந்த வகை தலைசுற்றலுக்கு……
கருமிளகு அல்லது வெள்ளை மிளகு அல்லது வெந்தயத்தை பாலில் அரைத்து தலைக்கு தேய்த்து குளிக்கலாம்.
இஞ்சியை தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி சட்டியில் போட்டு வதக்கவும். நன்கு வதங்கிய பின் அதனுடன் கொஞ்சம் தேன் சேர்த்து மேலும் வதக்கி கொஞ்சம் தண்ணீரையும் சேர்த்து சிறிது காய்ந்தவுடன் இறக்கி வடிகட்டி அதனுடன் கற்கண்டு சேர்த்து ஒரு அவுன்ஸ் வீதம் தினமும் 2 லிருந்து 3 வேளை குடித்து வந்தால் தலைச்சுற்றல் குறையும்.
அஜீரணத்தால் வரும் தலைச் சுற்லுக்கு சுக்கு, மல்லிவிதை, சீரகம் போட்டுக் காய்ச்சிய சுடுநீரைக் குடிப்பது நல்லது.
கசகசா, கொத்தமல்லி, பருத்தி விதை ஆகியவற்றை நன்றாக இடித்து பொடி செய்து சர்க்கரை கலந்து சாப்பிட்டு வந்தால் தலைசுற்றல், மயக்கம் ஏற்படுவது குறையும்.
வெங்காய சாறு, கடுகு எண்ணெய் இரண்டையும் சம அளவு எடுத்து சூடாக்கி இளம் சூட்டில் காதில் விட, காது இரைச்சல் குறையும்.
சுக்கு, மிளகு, திப்பிலி, லவங்கபட்டை, சதகுப்பை, காயம், அதிவிடயம் ஆகியவற்றை சம அளவு எடுத்து சிறிதளவு நல்லெண்ணையும் காடியையும் அதனுடன் சேர்த்து காய்ச்சி அந்த எண்ணெயை காதில் சில
துளிகள் விட்டு வந்தால் காது இரைச்சல் நீங்கும்.
நெல்லிவற்றல், சந்தனத்தூள், மல்லி விதை மூன்றையும் தண்ணீரில் ஊற வைத்து வடிகட்டி அந்த நீரை அருந்தி வந்தால் தலைசுற்றல், கிறுகிறுப்பு குறையும். மல்லி விதை 5 கிராம், உலர்ந்த நெல்லிக்காய் துண்டுகள் 5 கிராம் ஆகிறவற்றை இரவில் ஊற வைத்து காலையில் வடிகட்டி சர்க்கரை சேர்த்து பருக வேண்டும். கொத்தமல்லி சாறும் நல்லது. இதனுடன் தேன் அல்லது மோர் கலந்து குடிக்கலாம். எலுமிச்சை சாறும் நல்ல மருந்தாகும்.
முக்கிய குறிப்பு.
தொந்தரவு தொடர்ந்து நீடிக்குமேயானால் மருத்துவரை கலந்து ஆலோசிப்பது நல்லது.
எனெனில் மூளையில் வேறு பிரச்னைகளுக்காக தலைசுற்றல் வந்தால் அதற்கான சிகிச்சையே உடனே எடுத்தாகவேண்டும்.
நம் காதில் உள்ள சிறிய எலும்புகள்தான் நாம் தலையை உடலை பல்வேறு விதமாக ஆட்டும்போது நமது உடலை சமநிலையில் வைத்திருக்க உதவுகின்றன. இந்த எலும்புகளில் பிரச்னை என்றாலும் கூட தலைசுற்றல் வரும்.
எப்போதாவது வந்தால் பயப்படத் தேவையில்லை. ஆனால் அடிக்கடி வந்தால் தவறாமல் மருத்துவரை பார்த்து நாடி பரிசோதித்துக் கொள்ளுதல் மிகவும் அவசியம்.
0 Comments: