மார்கழி மாதத்தின்
(30)முப்பது நாட்களிலும் பட வேண்டிய திருவெம்பாவை பாடல்கள்!
மாணிக்கவாசகர் எழுதிய திருவெம்பாவை பதிகம் திருஅண்ணாமலையில் அருளியது,மற்றும் திருப்பள்ளியெழுச்சி பதிகம் திருப்பெருந்துறையில் அருளியது.
கன்னிப் பெண்கள் ஒருவரை மற்றொருவர் துயிலெழுப்பி, அனைவரும் ஒருங்கு சேர்ந்து நீர்நிலைகளுக்குச் சென்று கூட்டமாக நீராடியவாறு தாங்கள் வழிபட்டு வந்த பாவைத் தெய்வத்திடம், தங்களது வாழ்வு வளமாக இருக்க வேண்டும் என்றும் தங்களுக்கு கண் நிறைந்த கணவன் வேண்டும் என்றும் வேண்டியபடி பாடுவதாக அமைந்த பாடல்கள் இவை.
மாணிக்கவாசக சுவாமிகள் திருஅண்ணாமலையில் சிறுமிகள் பாவை நோன்பு நோற்பதைக் கண்டு தன்னையும் பாவையாக பாவித்து பாடிய பதிகம் திருவெம்பாவை பாடல்களாகும்.
திருவெம்பாவை மொத்தம் இருபது பாடல்கள் கொண்டவை. முதல் எட்டு பாடல்கள் மகளிர்கள் ஒருவரை ஒருவர் எழுப்பிக்கொண்டு எல்லோருமாக இறைவனின் புகழினை பாடியவாறு நீராடச் செல்லுதலையும், ஒன்பதாவது பாடலில் தங்களது வேண்டுகோளை இறைவனிடம் வைப்பதையும், பத்தாவது பாடலில் இறைவனைப் புகழ்ந்து பாடும் தன்மையை கேட்டு அறிவதையும் உணர்த்துகின்றன. அடுத்த பத்து பாடல்கள் அனைவரும் சேர்ந்து நீராடுதலை உணர்த்துவதாகவும் அமைந்துள்ள பாடல்கள்.
திருவெம்பாவையின் இருபது பாடல்களுடன் திருப்பள்ளியெழுச்சி பதிகத்தின் பத்து பாடல்களையும், மார்கழி மாதத்தில் பாடுவது சைவர்களின் மரபு.
இந்த இரண்டு பதிகங்களும் மணிவாசகர் அருளிய திருவாசகத்தில் இடம் பெறுகின்றன.
சிறு பெண்களுக்கு இடையில் நடைபெறும் உரையாடலாக பல பாடல்கள் அமைந்துள்ளதையும், ஒத்த வயதினர் பேசும்போது அவர்களுக்குள்ளே எழும் கேலியும் பரிகாசமும் ஆங்காங்கே தொனிப்பதையும் நாம் உணரலாம்.
ஒவ்வொரு பாடலின் இறுதியில் வரும் ஏலோர் எம்பாவாய் என்ற தொடரை, பொருள் ஏதும் இல்லாத அசைச் சொல்லாக சிலர் கருதுகின்றனர்.
சிலர், பாவை போன்ற பெண்ணே, நீ சிந்திப்பாயாக என்று பொருள் கொள்கின்றனர்.
இந்த பாடல்களில் பல தத்துவக் கருத்துகள் புதைந்து கிடைக்கின்றன.
இறைவனையே உருக வைத்த திருப்பாடல்களை நமக்குக் கொடுத்த மாணிக்கவாசக நாயனார் அருளிய பாடல்களை இந்த மார்கழி
மாதத்தின் முப்பது(30) நாட்களிலும் நாமும் பாடி இறையருள் பெறுவோமா?.
மாணிக்கவாசகரின் இந்த திருவெம்பாவை முப்பது (30)பாடல்களை எனது நண்பர்களுக்காக மார்கழி மாதத்தின் 30 நாட்களிலும் தொடர்ந்து பதிவிட இருக்கின்றேன்.
மார்கழி மாதத்தின்
முதல் நாள் பாட வேண்டிய திருவெம்பாவை பாடல் 1
🌹ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும் சோதியையாம் பாடக் கேட்டேயும் வாள் தடங்கண்
மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்
மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலி போய்
வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து
போதார் அமளியின் மேல் நின்றும் புரண்டு இங்ஙன்
ஏதேனும் ஆகான் கிடந்தாள் என்னே என்னே
ஈதே எந்தோழி பரிலோர் எம்பாவாய்
🌹பொருள்:
வாள் போன்ற நீண்ட கண்
களையுடைய தோழியே! முதலும் முடிவும் இல்லாத ஒளிவெள்ளமாய் பிரகாசிக்கும் நம் சிவ பெருமான் குறித்து நாங்கள் பாடுவது உன் காதில் கேட்கவில்லையா? செவிடாகி விட்டாயோ? அந்த மகாதேவனின் சிலம்பணிந்த பாதங்களைச் சரணடைவது குறித்து நாங்கள் பாடியது கேட்டு, வீதியில் சென்ற ஒரு பெண் விம்மி விம்மி அழுதாள். பின்னர் தரையில் விழுந்து புரண்டு மூர்ச்சையானாள். ஆனால், நீ உறங்குகிறாயே! பெண்ணே! நீயும் சிவனைப் பாட எழுந்து வருவாயாக!
விளக்கம்: திருவண்ணாமலையில் அண்ணாமலையார் மார்கழி அதிகாலையில் பவனி வருகிறார். அவரைத் தரிசிக்க பெண்கள் காத்து நிற்கிறார்கள். தங்களுக்கு கிடைத்த இந்த நற்பேறு தங்கள் தோழிக்கும் கிடைக்க வேண்டுமென்ற ஆசையில் அவளை எழுப்புகிறார்கள்.
🌿🌿அகிலம் காக்கும் தந்தை அண்ணாமலையார் மலர் பாதம் சரணம் . 🌿🌿
**சிவாய நம🙇 சிவமே ஜெயம் சிவமே தவம் . சிவனே சரணாகதி. சிவமே என் வரமே
0 Comments: