புதன், 26 பிப்ரவரி, 2025

சிவராத்திரி சிவதலங்கள் வசிஷ்டேஸ்வரர் திருக்கோவில் திட்டை

சிவராத்திரி சிவதலங்கள் வசிஷ்டேஸ்வரர் திருக்கோவில் திட்டை



மகா சிவராத்திரி என்பது ஒவ்வொரு இந்துவும் விரதமிருந்து விழித்திருந்து சிறப்பித்து வரம்பெற வேண்டிய மகா முக்கிய பண்டிகை, அதுவும் மகா கும்பமேளாவில் வரும் இந்த மகா சிவராத்திரி மிக அபூர்வமானது, பெரும் வரம் தர வல்லது

இந்த சிவராத்திரி அன்று வழிபட பல தலங்கள் முக்கியமானவை, அவ்வகையில் சிவராத்திரிக்கு சிறப்பான தலங்களில் நான்கு தலங்கள் தவறவிட கூடாதவை

ஊழி எனும் பிரளய காலம் முடிந்து இந்த பிரபஞ்சம் மீண்டும் ஒரு சிவராத்திரியில் தொடங்கிற்று, அப்போதுதான் ஈசன் தன் தேவியுடன் உலகை சிருஷ்டிக்க தொடங்கினார்

இந்த பிரபஞ்சம் ஈசனில் இருந்து உதித்து ஈசனிலே ஒடுங்கும்,அப்படி ஒடுங்கும் காலமே ஊழி காலம், அந்த ஈசனில் இருந்து அது மீண்டும் உருவாகி வரும் காலம் யுகம் தொடங்கும் காலம்

ஈசன் எனும் அந்த பரம்பொருளே சிவன், ஆதிபராசக்தி, ஆதிநாராயணன் எனும் மூன்றாக பிரிந்து அந்த நாராயணனில் இருந்து பிரம்மா உருவாகி வருவார்

ஈசனுக்கு உள்ள ஐந்தொழில்கள் இப்படி பிரிந்து பல சக்திகளால் செய்யபடும் அவை உதித்தது இந்த தருணத்தில்தான், சிவராத்திரியில்தான்

இன்னும் தேவர்களுக்கான வரமும் அசுரர்களுக்கான வரமும் இன்னும் யட்சர்கள் நாகர்கள் காந்தர்வர்கள் என எல்லாருக்குமான வரமும் அப்போதுதான் கொடுக்கபட்டது

மானுடர் உள்ளிட்ட உயிர்கள் அதன் பின்பே தோன்றின அவர்களுக்கும் ஞானம் அருளபட்டது

சிவராத்திரியின் முதல் சாமம் மானிடர் வழிபடுவது, இரண்டாம் சாமம் யட்சர்கள் நாகர்களுக்கானது, மூன்றாம் சாமம் அசுரர்களுக்கும், நான்காம் சாமம் தேவர்களுக்குமானது

உலகை மீளபடைத்தது தங்களையும் படைத்ததில் எல்லா படைப்புக்களும் சிவனை அந்த இரவில் தொழும் வகை இது

இந்த நான்கு சாமங்களிலும் நான்கு ஆலயங்கள் முக்கியமானவை, சிவராத்திரியோடு தொடர்பு கொண்டவை, இங்கு சிவராத்திரியில் வழிபடுவது சாலசிறந்தது, நான்கு சாமங்களும் நான்கு ஆலயங்களில் வழிபடுதல் நன்று

வாய்ப்பு கிடைத்தவர்கள் செல்லலாம் வாய்ப்பு இல்லாதவர்கள் எங்கிருந்தாலும் மனதால் வழிபடலாம் சிவனருள் நிச்சயம் உண்டு

மகாசிவராத்திரியில் முதல் காலத்தில் நடைபெற்றது எனவே மகா சிவராத்திரி முதல் காலத்தில் வழிபட வேண்டிய ஆலயம் தஞ்சை அருகில் உள்ள திட்டை வசிஷ்டேஸ்வரர் திருக்கோவில்

"கருவினால் அன்றியே கருவெலாம் ஆயவன்
உருவினால் அன்றியே உருவுசெய் தானிடம்
பருவநாள் விழவொடும் பாடலோடு ஆடலும்
திருவினார் மிகுபுகழ்த் தென்குடித் திட்டையே"

என சம்பந்த பெருமனானால் தேவாரம் பாடபெற்ற தலம் இது.

இதன் வரலாறு ஊழிகாலத்தின் முடிவில் புது யுகம் தொடங்கிய காலத்தில் இருந்து வருகின்றது திட்டை என்றால் மேடான என பொருள்

ஊழி காலத்தில் ஈசனுக்கு உகந்த 28 தலங்களில் 26 தலங்கள் ஊழிக்காலத்தில் மூழ்கிவிட்டன. இரண்டு தலங்கள் மட்டும் திட்டாக நின்றது. அவற்றுள் ஒன்று சீர்காழி.அது வடகிடிதிட்டை என்றானது

சீர்காழியில் ஊழிக்காலத்தில் ஓம் என்ற மந்திர ஒலி எழுந்தது போலவே திட்டையில் ஹம் என்னும் மந்திர ஒலி வெளிப்பட்டதுடன் வேறு பல மந்திர ஒலிகளும் வெளிப்பட்டன. எனவே இத்தலம் ஞானமேடு எனவும் தென்குடி திட்டை எனவும் அழைக்கபட்டது

இன்று காவிரியாறில் இருந்து கிளைகள் இடையே பிரிந்து வெட்டாறு, வெண்ணாறு இடையே இது அமைந்திருக்கின்றது, இந்த ஆறுகள் காலத்தால் பிந்தியவை இந்த தலம் அதற்கு முந்தையது

இந்த திட்டையில்தான் சிவன் தேவியோடு அமர்ந்தார் அவரும் தேவியும் அமர்ந்து உலகை மீளபடைக்க தேவர்களை இன்னும் எல்லா சக்திகளையும் படைத்தார்கள்

இந்த தலத்தின் பெருமை அறிந்து அங்கு சுயம்புவாய் தோன்றிய சிவனை வழிபட வசிஷ்ட மகரிசி வந்தார், அவர் குடில் அமைத்து வழிபட்ட சிவன் வசிஷ்டேஸ்வரர் என்றானார், சுயம்பாக தோன்றிய ஈசன் சுயம்பூதேஸ்வரர் என்றும் அழைக்கபடுகின்றார்.

காமதேனு வழிபட்டு சாபம் தீர்த்த இடம் என்பதால் இவருக்கு பசுபதீஸ்வரர் என்ற பெயரும் உண்டு. ரேணுகா தேவி வழிபட்டதால் இத்தலம் ரேணுகாபுரி என்றும் அழைக்கபடுகின்றது

அன்னை உலகாம்பிகை என்றும் மங்களாம்பிகை என்றும் அழைக்கபடுகின்றார்

இந்த தலத்தின் பெருமை இத்தல புராணம் சமஸ்கிருதத்தில் "தெட்சன‌ குடித்வீப மஹாத்மியம்" என்ற நூலில் உள்ளது. இந்நூல் "சுயம்பூதேஸ்வரர் புராணம்" என தமிழிலும் உண்டு, அங்கே இதன் வரலாறும் பெருமையும் முழுக்க சொல்லபட்டுள்ளன‌

உலகை இயக்குபவையும் ஆதியானவனையும் வேதங்கள் என்பதால் அவை இங்கு சிவனை வழிபட்டன, நான்கு வேதங்களும் சிவனை பணிந்த தலம் இது

பிரம்மா, மகாவிஷ்ணு, காலபைரவர், சூரிய பகவான், சனீஸ்வரர், யமதர்மன், இந்திரன் என மிக முக்கிய தேவர்கள் வழிபட்டு சக்தியினை மீள பெற்ற தலம் இது அப்படியே மகா ரிஷிகளான‌ கெளதமர், ஜமதக்னி முனிவர் முதலானோரும் ஈசனை நினைந்து தவமிருந்து வரம்பெற்ற இடம் 

சக்தி வாய்ந்த இந்த ஸ்தலத்தை முறையாக ஸ்தாபித்தவர் வசிஷ்ட மாமுனி அவர் நடுவில் இந்த முக்கிய லிங்கத்தையும் நான்கு மூலைகளில் நான்கு சிவலிங்கங்களையும் ஸ்தாபித்தார்

வசிஷேடேஸ்வரரை சுற்றி நான்கு லிங்கள் உள்ள இந்த அமைப்பு "பஞ்ச லிங்க ஷேத்திரம்" என கொண்டாடபடுகின்றது, வேறு எங்கும் காணமுடியா அமைப்பு இது

பஞ்சராட்சர மந்திரத்தை விளக்கும் தத்துவமாக இது அமைந்துள்ளது
 
இத்தலம் யுகத்தின் தொடக்கத்தில் உருவான தலம், ஆதி தொன்மையான தலம் இந்த‌ தலத்தை வழிபட்டால் சிதம்பரம், காளஹஸ்தி, திருவண்ணாமலை, திருஆனைக்கா மற்றும் காஞ்சிபுரம் ஆகிய பஞ்சபூத திருத்தலங்களில் வழிபட்ட பலன் கிடைக்கும்

பஞ்ச பூத தலங்களின் மொத்த பலன்களையும் ஒரே இடத்தில் தரும் ஆலயம் இது

இந்த ஆலயம் சந்திரன் வழிபட்ட தலமுமாகும், தட்சனால் சாபம் பெற்ற சந்திரன் தன் சாபத்தை போக்கிய ஈசனை இங்கேவழிபட்டார்

இதனால் இந்த கருவறையில் மேல் சந்திரகாந்த கல் பதிக்க்பட்டுள்ளது, இது காற்றில் இருந்து நீரை தானே எடுத்து சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்யும் வகையில் அமைக்கபட்டுள்ளது

இதனால் இங்கு சிவலிங்கம் மேல் நீர் தாரை இல்லை, மாறாக சந்திரகாந்த கல்லே குறிப்பிட்ட நேரத்திற்கு ஒருமுறை நீரை சொட்டு சொட்டாக சிவலிங்கம் மேல் பொழிகின்றது, மாபெரும் அற்புதம் இது

இறைவன் இந்த பிரபஞ்சத்தை தனியாக படைக்கவில்லை தன் சக்தி தேவியுடன் இணைந்தே படைத்தார்,அந்த சக்திக்கு உரிய இடம் இங்கு தனியாக கொடுக்கபட்டுள்ளது

எங்குமில்லா ஒரு விஷேஷ அமைப்பு இங்கு உண்டு, ஆம், அம்மன் சன்னிதிக்கு முன்புள்ள மண்டபத்தின் மேலே 12 ராசிகள் செதுக்கப்பட்டுள்ளன. 

அந்தந்த ராசிக்காரர்கள், தங்களுக்கான ராசிக்கட்டத்தின் கீழ் நின்று அம்மனை வேண்டினால் வேண்டிய வரம் கிடைக்கும். திருமணத் தடை, மாங்கல்ய தோஷம் நீங்க அருள் புரிவதால், இந்த அன்னை ‘மங்களாம்பிகை’ என்றும் அழைக்கப்படுகிறார்.

ஈசனுக்கு இணையான பீடத்தில் அன்னை அமர்ந்திருக்கின்றார், பெண்களுக்கு மங்கள வாழ்வளிப்பதால் அம்பாள் மங்களாம்பிகை எனப் போற்றப்படுகிறாள்

இந்த ஆலயத்தின் விஷேஷம் அந்த‌ ராஜா தக்ஷிணாமூர்த்தி சன்னதி. இங்கு குருவுக்கு தனி சன்னதி உள்ளது. அம்மன் சன்னதிக்கும் ஈஸ்வரன் சன்னதிக்கும் நடுவில் தனி சன்னதி கொண்டிருக்கிறார் குரு பகவான் 

இங்கு குரு நின்ற கோலத்தில் 4 கைகளுடன் காணபடுகிறார். எல்லா தலத்திலும் அமர்ந்திருக்கும் குரு பகவான் இங்கு நின்ற நிலையில் அருள் பாலிக்கின்றார்

விநாயக பெருமானும், பைரவரும் தனி தனி சன்னதிகளில் அருள் பாலிக்கின்றார்கள்
 

தட்சாயண காலத்தில் சூரிய பகவான் ஆவணி மாதம் 15, 16, 17 தேதிகளிலும் இன்னும் உத்ராயண புண்ணிய காலத்தில் பங்குனி மாதம் 25, 26, 27 தேதிகளிலும் வசிஷ்டேஸ்வர் திருமேனியில் பட்டு சூரியபூஜை செய்கிறார்.
 

இந்த தலத்தின் முருகபெருமானும் சிறப்பானவர், பிரபஞ்ச இயக்கம் என்பதோ படைத்தல் என்பதோ சாதாரணம் அல்ல என்பதால் அங்கு பெரும் ஞானம் அவசியம் , அந்த ஞானத்தை மும்மூர்த்திக்கும் தேவர்களுக்கும் வழங்க இங்கு முருகன் அமர்ந்திருக்கின்றார்

எல்லா தேவர்களுக்கும் ஞானத்தை வழங்குவதால் இந்த ஆலயம் ஞானமேடு, ஞான திட்டை என முருகபெருமானை முன்னிட்டு அழைக்கபடுகின்றது

இந்த ஆலயம் முழுக்க கருங்கல், ஆலய கலசம் கொடிமரம் என எல்லாமே கருங்கல் ,அந்த அளவு உறுதியாக காலத்தை வென்று நிற்கும்படி கட்டபட்ட ஆலயம் இது
 

இந்த ஆலயம் சிவராத்திரிக்கு ஏன் விஷேஷம் என்றால் இங்கு தேவர்கள் மட்டுமல்ல எல்லா தரப்பும் வழிபட்ட தலம், அப்படியே ராவணனின் முப்பாட்டன் தாயவழி முப்பாட்டர் சுமாலி வழிபட்ட தலம் இது

அவனின் தேர் இங்கே பதிந்து நின்றதால் இது ரதபுரி , தேருர் என்றும் அழைக்கபடும்

நாகங்களில் ஆதிசேஷன் வழிபட்ட தலம் இது , யட்சர்களில் குபேரனும் இதர லோகத்தவரும் வந்து ஈசனை வணங்கி அருள்பெற்ற தலம் இது

இங்கு ஆலயத்துக்கு வெளியே தீர்த்தம் உண்டு அதன் கரையில் தேவ கன்னியர் மல்லிகை, முல்லை என கொடிகளாக உண்டு, அப்படியே தேவர்கள் வில்வ மரங்களாக உண்டு

இந்த ஆலயத்தின் கல் முதல் மரம் செடி கொடிவரை எல்லாமே தெய்வாம்சம் கொண்டவை, ஒவ்வொன்றும் ஒரு தேவசாயலும் வரமும் கொண்டிருக்கும்

இந்த ஆலயத்தின் தாத்பரியம் புரிந்து கொள்ள எளிதானது

ஒரு விஷயத்தை படைத்து காத்துவருவது எளிதானது அல்ல அதற்கு பெரும் ஞானமும் அறிவும் வேண்டும், இங்கே சிவன் அதை அருளுகின்றார்

வசிஷ்டர் இந்த சிவனை வழிபட்டுத்தான் அயோத்தி எனும் ராமபிரானின் அரசுக்கே ராஜகுருவாக இருக்கும் பெரும் பாக்கியம் அடைந்தார், இன்றுவரை ஒரு ராஜ்ஜியத்தின் அமைப்புக்கும் ஆளுகைக்கும் ராமராஜ்ஜியமே எடுத்துகாட்டு என்றால் அந்த ஞானம் எப்படிபட்டதாக இருந்திருக்க வேண்டும்?

அந்த பெரும் ஞானத்தை , உச்ச ஞானத்தை தரும் ஆலயம் இது , அதனாலே இது குரு தலம், ராஜகுரு தலம் என்றும் அழைக்கபடும்

குரு பகவான் இங்கு வழிபட்ட்டே தேவர்களுக்கும் குருவாகும் யோகம் பெற்றார்

ராமனின் முன்னோர் மட்டுமல்ல ராவணனின் முன்னோரும் வழிபட்டு பெரும் வரம் பெற்ற ஆலயமும் இதுதான்

இந்த யுகத்தின் தொடக்கம் இந்த ஆலயத்தில் இருந்துதான் வந்தது அங்கிருந்தே எல்லா மும்மூர்த்தியும் தேவரும் அசுரரும் பலரும் வரம் வாங்கி வந்தார்கள்

இங்கு சிவராத்திரி அன்று வழிபடும் போது ஒரு மனிதன் புது பிறப்பாகின்றான், சிவராத்திரியின் முதல் வழிபாட்டை இங்கு செய்யும் போது அவன் புதுபிறப்பாக ஞானமும் அறிவும் கொண்ட பிறப்பாக மாறுகின்றான்

இதனாலே இந்த ஆலயத்தில் சிவராத்திரி மகா முக்கியம், மிக பெரிய இடம் அந்த ஆலயத்துக்கு உண்டு

வசிஷ்ர் என ரிஷிகளுக்கும், முப்பெரும் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும், நாகங்களுக்கும் இன்னும் பலருக்கும் தொடக்க ஞானமும் அறிவும் தெளிவும் வரமும் அருளிய ஆலயமிது, புது யுகத்தின் தொடக்க புள்ளி இது

வாய்ப்பு கிடைத்தவர்கள் தவறாமல் முதல் பூஜையினை இந்த் தலத்தில் செய்தல் மிக்க நன்று அது பிறப்பையே புதிதாக்கும், வாய்ப்பு இல்லாதவர்கள் முதல் சாம பூஜையில் இந்த வசிஷேஸ்டரை நினைந்து ஒரு வில்வ இலை எடுத்து வைத்து வணங்குங்கள், எல்லா அருளும் உங்களை அந்நொடி தேடிவரும்

புது பிறப்பாக முழு ஞானமும் குருவருளும் திருவருளும் சிவனின் தனி அருளும் உங்களை தேடி வரும் இது சத்தியம்
 
வசிஷ்டேஸ்வரர் மும்மூர்த்திகளுக்கு சக்தியையும், ஞானத்தையும் அருளியவர். கால பைரவரின், பிரம்மஹத்தி தோஷம் நீக்கியவர். 

குரு பகவானுக்குத் தேவகுரு என்ற பதவியை அருளியவர். நான்கு மூலைகளிலும் நான்கு லிங்கங்களின் நடுவில் மூலவர் வசிஷ்டேஸ்வரர் அமர்ந்து பஞ்ச லிங்கேஸ்வரராக அருள்பாலிக்கின்றார்.

மஹா சிவராத்திரி பற்றிய செய்திகள்

மஹா சிவராத்திரி பற்றிய செய்திகள்


* சிவராத்திரி என்ற சொல் சிவனுடைய ராத்திரி, சிவமான ராத்திரி, சிவனுக்கு இன்பமான ராத்திரி என்று பல வகைப் பொருளை தருகிறது.

* சிவராத்திரி 4 ஜாமங்களிலும் ஒருவர் செய்யும் பூஜை, அவரை முக்தி பாதைக்கு அழைத்துச் செல்ல உதவும்.

* 'சிவாயநம' என்று சிந்திப்போர்க்கு அபாயம் ஒரு போதும் இல்லை.

* 'மஹா' என்றால் பாவத்தில் இருந்து விடுபடுவது என்றும் பொருள் படும். சிவராத்திரி விரதம் நிச்சயம் பெரிய பாவங்களைப்போக்கும்.

* ஊத்துக்கோட்டை அருகில் உள்ள சுருட்டப்பள்ளியில் மட்டுமே சயன கோலத்தில் ஈசன் உள்ளார். சிவராத்திரி தினத்தன்று அங்கு ஈசனை வெள்ளி அங்கியில் தரிசனம் செய்யலாம்.

* எறும்பு, நாரை, புலி, சிலந்தி, யானை, எலி போன்றவை கூட சிவபூஜையால் மோட்சம் அடைந்துள்ளன.

• ஒரு வருடம் சிவராத்திரி விரதம் இருப்பது என்பது நூறு அசுவமேத யாகம் செய்த பலனும், பல தடவை கங்கா ஸ்நானம் செய்த பலனும் தரவல்லது.

* கஞ்சனூரில் ஒரே பிரகாரத்தில் அடுத்தடுத்து 2 தெட்சிணாமூர்த்திகள் உள்ளனர். சிவராத்திரியன்று இவர்களை வழிபட்டால், சிவஞானம் எளிதில் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

* கருட புராணம், கந்தபுராணம், அக்னி புராணம் உள்ளிட்ட பல்வேறு நூல்களில் சிவராத்திரி மகிமை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

* கஸ்தூரி, கோரோசனை, குங்குமப்பூ, பச்சைக்கற்பூரம் ஆகிய நறுமணப்பொருட்களை கலந்து தயாரிக்கும் சந்தனக்காப்பு அலங்காரம் தான் சிவபெருமானுக்கு மிகவும் பொருத்தமான வழிபாடாக கருதப்படுகிறது.

* சனிபிரதோஷ தினத்தன்று வரும் சிவராத்திரிக்கு 'கவுரிசங்கரமண மஹாசிவராத்திரி' என்று பெயர். அந்த சிவராத்திரியில் கணவன்- மனைவி இருவரும் சேர்ந்து வழிபாடு செய்தால் கிடைக்கும் பலன்கள் ஏராளம்.

* சிவபெருமானுக்கு சூரியன், சந்திரன், அக்னி ஆகியோர் 3 கண்களாக உள்ளனர். சிவபெருமான் லிங்கமாக உருவெடுத்த தினமே சிவராத்திரி என்று ஒரு கருத்து உண்டு.

* சிவம் என்ற சொல்லுக்கு மங்களம் தருபவர் என்று பொருள். எனவே எந்த அளவுக்கு ஒருவர் சிவ, சிவ…. என்று உச்சரிக்கிறாரோ, அந்த அளவுக்கு அவர் நன்மை பெறுவார்.

* சிவராத்திரி அன்று ஒவ்வொரு ஜாம பூஜையின்போது சிவபுராணத்தை வாசிப்பது மிகுந்த நன்மை தரும். சிவராத்திரி இரவில் திருமுறை ஓதுவது மிக சிறப்பானது.

* சிவராத்திரி தினத்தன்று 

1. ஸ்ரீ பவாய நம, 
2. ஸ்ரீ சர்வாய நம, 
3. ஸ்ரீ பசுபதயே நம, 
4. ஸ்ரீ ருத்ராய நம, 
5. ஸ்ரீ உக்ராய நம, 
6. ஸ்ரீ மஹாதேவாய நம, 
7. ஸ்ரீ பீமாய நம, 
8. ஸ்ரீ ஈசாராய நம 

என்ற 8 பெயர்களை சிவராத்திரியன்று ஜெபிப்பது நல்லது.

தெரிந்து கொள்வோம்......

உலகின் முதல்வனே அகிலம் காக்கும் தந்தை அண்ணாமலையாரே உன்‌ மலர் பாதம்‌ சரணம் . 🌿🌿

**சிவாய நம🙇 சிவமே ஜெயம் சிவமே தவம் . சிவனே சரணாகதி. சிவமே என்‌ வரமே

உஙகள் குலதெய்வம் எது? இன்று வழிபட மறக்காதீர்

மகா சிவராத்திரி; 

உஙகள் குலதெய்வம் எது? 
இன்று வழிபட மறக்காதீர்


குலதெய்வ வழிபாடு என்பது மிகவும் இன்றிமையாதது.

 இஷ்டதெய்வம் என்பது நாம் விரும்பி வழிபடும் கடவுள். 

எனினும், குலதெய்வம் என்பது நமது முன்னோர்களினால் தலைமுறை தலைமுறையாக வழிபட்டு வருவது.

 ஆகவே, எப்படியாவது நமது குலதெய்வத்தை அறிந்து வழிபடுதல் அவசியம்.

குடும்பத்தில் எந்த சுபநிகழ்ச்சி நடந்தாலும், குலதெய்வத்தை வணங்கிய பிறகே அதற்கான பணிகளைத் தொடங்குகிறோம்.

 குலதெய்வம் என்பது நம் தாய் தந்தையைப் போல நம் கூடவே இருந்து வழிகாட்டும் அருள்சக்தியாகக் கருதப்படுகிறது.

 சிலருக்கு தங்கள் குலதெய்வம் எதுவென்றே தெரியாமல் இருக்கும். இதனால் அவர்களுக்கு பல சோதனைகள் ஏற்படுவதாகச் சொல்வதுண்டு. 

இப்படி குலதெய்வம் தெரியாமல் இருப்பவர்கள் வழிபாடு செய்வதற்கென்றே அகத்தியர் பூஜித்த துர்க்கை கோவில் கும்பகோணம் அருகிலுள்ள குத்தாலத்தில் இருந்து 3 கி.மீ., தூத்திலுள்ள கதிராமங்கலத்தில் உள்ளது. 

கதிர் வேய்ந்த மங்கலம் என்று கவிச்சக்கரவர்த்தி கம்பர் இவ்வூரைக் குறிப்பிடுகிறார்.

 கதிரவனின் கதிர்கள் அம்பிகையின் மீது படுவதால் இந்தப் பெயர் ஏற்பட்டது. இவளுக்கு ஆகாச துர்க்கை என்றும் பெயருண்டு. 

ஞாயிறு, செவ்வாய், வெள்ளிக்கிழமை ராகு காலங்களில் வன துர்க்கையை வழிபாடு செய்வது சிறப்பு.

காஞ்சி மகா சுவாமிகளை தரிசிக்க வந்த பக்தர் கண்ணீருடன் “சுவாமி... எத்தனையோ கோயில்களுக்குப் போயும் என் கஷ்டம் தீர்ந்தபாடில்லை” என்றார். 

அருள் பொங்கும் கண்களால் பார்த்தபடி சுவாமிகள் “உன் குலதெய்வத்தை வழிபட்டாயா?” 
எனக் கேட்டார். “குலதெய்வமா... எதுவென்றே தெரியாதே” என்றார்.  

  “வயதான உறவினர்களை சந்தித்துப் பேசு. அவர்களுக்கு குலதெய்வம் எதுவென்று தெரிந்திருக்கும். 

அங்கு போனால் கஷ்டம் ’சூரியனைக் கண்ட பனி’யாக மறையும்” என்றார் சுவாமிகள். இதிலிருந்து குலதெய்வ வழிபாடு எவ்வளவு முக்கியம் என்பது தெரிகிறது.

 வீட்டில் விளக்கேற்றி இன்று குலதெய்வத்தை வழிபட வேண்டும்.

மகாசிவராத்திரி 2025 ஸ்பெஷல்

மகாசிவராத்திரி 2025 ஸ்பெஷல் 


📿சிவன் ஏன் ஆதி யோகி என்று அழைக்கப்படுகிறார்: யோக மரபின் குரு📿

சிவபெருமான், பிரபஞ்சத்தின் இறுதியான, உருவமற்ற, மற்றும் முடிவற்ற இருப்பாகக் கருதப்படுகிறார், அதற்கு தொடக்கமோ முடிவோ இல்லை. சனாதன தர்மத்தில் சிவன் ஒரு மையக் கடவுளாகவும், மற்ற இருவருடனும் சேர்ந்து படைப்பு, காத்தல் மற்றும் அழிவு என்ற பிரபஞ்ச சக்தியைக் கொண்டவராகவும் இருக்கிறார். இந்து மதத்தின் சைவ மதத் தத்துவத்தில், அவர் உலகமே மற்றும் உலகம் இருப்பதற்கான காரணமான உயர்ந்த தெய்வமாகக் கருதப்படுகிறார்.

🚩இந்து மதத்தின் பிற கோட்பாடுகள் அவரை வெவ்வேறு வழிகளில் சித்தரிக்கின்றன, பெரும்பாலும் உருவமற்ற இருப்பு, ஒன்று அவர் உலகம் உந்தப்பட்ட இறுதி உணர்வு என்று கூறுகிறது. சிலர் அவரை உலகின் சக்தி மூலமான ஆதி சக்தியின் எதிர்முனையாகக் குறிப்பிடுகின்றனர், சில வேதங்கள் சிவ பகவானை பாதி ஆண் பாதி பெண் தெய்வமாக, இந்த உலகத்தைப் படைத்த ' அர்த்தநாரீஷ்வர் ' என்று சித்தரிக்கின்றன. எப்படியிருந்தாலும், சிவன் உயர்ந்த உணர்வாக சித்தரிக்கப்படுகிறார், அவர் சக்தியை தனது நித்திய பிரதியாகக் கொண்டுள்ளார், மேலும் உலகம் அவரிடமிருந்து உருவானது.

இவ்வாறு கூறப்படுகையில், சிவனின் தோற்றம் அல்லது புலப்படும் இருப்பு, புலித்தோல் அணிந்த, திரிசூலத்தை இணைத்து, நீண்ட கூந்தல் பூசப்பட்ட, ருத்ராட்ச ஆபரணங்களை அணிந்து, சாம்பலில் பூசப்பட்ட, தலையில் பிறை நிலவை அலங்கரிக்கும் ஒரு கலைந்த முனிவராக சித்தரிக்கப்படுகிறது. வேதங்களில் இந்த சித்தரிப்பு பெரும்பாலும் சிவ ஆதியோகி என்று குறிப்பிடப்படுகிறது, தியானத்தில் ஆழ்ந்து அல்லது பிரபஞ்சத்தின் தாளத்தைக் குறிக்கும் தாண்டவ நடனமாடுகிறது. சிவபெருமானின் இந்த வடிவம் துறவி மற்றும் வீட்டுக்காரர் இருவருக்கும் ஒரு முரண்பாடான தன்மையை வெளிப்படுத்துகிறது, மேலும் பக்தர்கள் அவரை போலேநாத் மற்றும் பயங்கரமான ருத்ரர் என்று குறிப்பிடும் அவரது கருணைக்காக அவரை வணங்குகிறார்கள்.

🚩ஆதியோகி யார் ?
 

ஆதியோகி என்ற சொல் " ஆதி " என்று முதல் அல்லது ஆதி என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது, மேலும் " யோகி " என்பது யோகா பயிற்சி செய்பவரைக் குறிக்கிறது. ஆதி யோகி என்பது யோகா அறிவியலை மனிதகுலத்திற்கு கடத்தும் பிரபஞ்ச ஆசிரியர், யோக மரபில் ஆதிகுருவாக சித்தரிக்கப்படுகிறார், மேலும் அவர் உள் நல்வாழ்வு மற்றும் சுய-உணர்தல் பற்றிய ஆழமான அறிவை வழங்குகிறார். இந்து மதத்தில் ஆதியோகி சிவன், முதல் யோகியாகவும் யோக ஞானத்தின் இறுதி மூலமாகவும் இருக்கிறார். ஆதியோகி உருவம் தியானலிங்கத்துடன் தொடர்புடையது, இது காலத்தால் அழியாத ஞானத்தைக் குறிக்கிறது, இது சுய கண்டுபிடிப்பின் பாதையில் தேடுபவர்களைத் தொடர்ந்து ஊக்குவிக்கிறது, ஆன்மீக பரிணாமத்திற்கான யோகப் பயிற்சிகளின் உருமாற்ற சக்தியை வலியுறுத்துகிறது.

🚩சிவன் ஏன் ஆதியோகி என்று அழைக்கப்படுகிறார் ?
 
இந்து மரபில் ஆதி அல்லது முதல் யோகியாகவும், யோக ஞானத்தின் இறுதி உணர்வு மற்றும் மூலமாகவும் போற்றப்படுவதால் சிவபெருமான் ஆதியோகி என்று அழைக்கப்படுகிறார். ஆதியோகி என்ற சிவன் என்ற கருத்து இந்து மதத்தின் ஆன்மீக மரபில் ஆழமாக வேரூன்றியுள்ளது, குறிப்பாக யோகா அறிவை தனது முதல் சீடர்களான சப்தரிஷிகள் அல்லது ஏழு முனிவர்களுக்கு பரப்பிய ஒரு பிரபஞ்ச ஆசிரியராக அவர் வகித்த தலைமை காரணமாக.

🚩ஆதியோகியாக சிவபெருமானின் பண்புகள்:
 
யோக மரபின் மூலாதாரமாகவும், தோற்றுவிப்பாளராகவும் சிவபெருமான் கருதப்படுகிறார். தீவிர தியானம் மற்றும் தவம் மூலம் சிவபகவான் உயர்ந்த உணர்வு நிலையை அடைந்தார் என்றும், சப்தரிஷிகள் மூலம் மனிதகுலத்துடன் இருப்பின் உள் பரிமாணங்களைப் பற்றிய ரகசியங்களைப் பகிர்ந்து கொள்ள முடிவு செய்தார் என்றும் நம்பப்படுகிறது.
 
இமயமலையில் உள்ள மானசரோவர் ஏரியின் கரையில், ஆதியோகி வேடத்தில் சிவன், யோக அறிவியலை சப்தரிஷிகளுடன் பகிர்ந்து கொண்டார். இது இந்து மதத்தில் குரு-சிஷ்ய பரம்பரையின் அடையாளமாகும். குருவிடமிருந்து சீடருக்கு ஆன்மீக ஞானத்தை கடத்துகிறார்.
 
ஆதியோகி சிவன் குருவாக ஆசனத்தின் உடல் நிலைகளை மட்டுமல்லாமல், பிராணயாமா (மூச்சுக் கட்டுப்பாடு), தியானம் (தியானம்) மற்றும் இருப்பின் தன்மை குறித்த ஞானம் உள்ளிட்ட யோகாவின் பல்வேறு பரிமாணங்களையும் கற்பித்தார்.
 
சிவபெருமானின் சின்னமான உருவம் பெரும்பாலும் தியானலிங்கத்துடன் தொடர்புடையது, இது தியான இடம் மற்றும் ஆற்றல் மையம், தனித்துவமான மூன்றாவது கண்ணுடன் யோக நிலையில் உள்ளது, இது உள் பார்வை மற்றும் நுண்ணறிவுகளைக் குறிக்கிறது. சிவ பகவான் தனது கழுத்தில் ஒரு பாம்பைச் சுருட்டிக் கொண்டுள்ளார், இது குண்டலினி சக்தியைக் குறிக்கிறது மற்றும் பிறை சந்திரன் காலத்தின் சுழற்சி தன்மையைக் குறிக்கிறது.

சிவ ஆதியோகியின் போதனைகள் ஒரு குறிப்பிட்ட காலம், இடம் அல்லது கலாச்சாரத்திற்கு மட்டுப்படுத்தப்படவில்லை, அவை உலகளாவியதாகவும் காலத்தால் அழியாததாகவும் கருதப்படுகின்றன, ஆன்மீக பரிணாமம் மற்றும் சுய உணர்தல் பாதையில் தேடுபவர்களுக்கு வழிகாட்டுதலை வழங்குகின்றன.
 
🚩சிவபெருமான் ஆதியோகி அவதாரத்தால் பெறக்கூடிய நற்பண்புகள்:
 

சிவன் துறவிகளின் வாழ்க்கையை வாழ்ந்தார், ஆனால் அவரது நித்திய இணை சக்தியான சக்தியை மணந்தார். ஒரு பயிற்சியாளராக வாழ்ந்து சமநிலையைத் தேட வேண்டும் என்று பரிந்துரைக்க 
 

சிவபெருமானின் கழுத்தில் இருக்கும் பாம்பு குண்டலினியின் விழிப்புணர்வையும் தேர்ச்சியையும் பிரதிநிதித்துவப்படுத்துவது போல, ஆன்மீக விழிப்புணர்வுக்காக, உயிர் சக்தியை முதுகெலும்பின் அடிப்பகுதியிலிருந்து தலையின் கிரீடம் வரை நகர்த்தி, அதை ஒருங்கிணைத்து உயர்த்தும் யோக இலக்கைக் கற்றுக்கொள்ள.
 

🚩சிவ ஆதியோகி வடிவம் உள் பார்வை, உள்ளுணர்வு மற்றும் விரிவாக்கப்பட்ட நனவை ஊக்குவிக்கிறது, வாழ்க்கையின் சுழற்சி இயல்பை ஏற்றுக்கொள்கிறது மற்றும் சுயத்தின் நித்திய இயல்பைப் புரிந்துகொள்வதில் கவனம் செலுத்தும் யோகாவின் தத்துவத்தைப் புரிந்துகொள்கிறது, மேலும் சுய உணர்தலில் கவனம் செலுத்த வேண்டியதை சொல்கிறது.
 
சிவனின் பிரபஞ்ச நடனம் எதிரெதிர்களின் இடைவினையையும், வாழ்க்கையின் எப்போதும் மாறிவரும் தன்மையையும் பிரதிபலிக்கிறது, இது யோகிகளை இருப்பினை நினைவூட்டுகிறது.
 

பிரபஞ்சத்தின் ஆழமான உண்மைகளை வலியுறுத்தி, தனிமை மற்றும் வாழ்க்கையில் உள்ளடக்கத்தை சமநிலைப்படுத்தும் ஒழுக்கமான வாழ்க்கையை நடத்துவதன் மூலம், யோகாவின் முழுமையான தன்மையைப் பரப்பும் அனைத்துப் பின்னணிகளைச் சேர்ந்த மக்களுக்கும் சிவனை ஆதியோகியாகக் கற்பிப்பது உலகளாவியதாகக் கருதப்படுகிறது. 

🚩முடிவாக, சிவன் ஆதியோகி என்பவர் யோக மரபின் முதன்மையான மற்றும் முன்னணி விளக்கவுரையாளர் ஆவார், அவர் மனிதகுலத்தை உள் அமைதி, சுய கண்டுபிடிப்பு மற்றும் ஆன்மீக வளர்ச்சியை நோக்கி வழிநடத்துகிறார்.🚩

எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் இறைவா போற்றி போற்றி 
திருச்சிற்றம்பலம்

மகாசிவராத்திரி மகத்துவங்கள்

மகாசிவராத்திரி மகத்துவங்கள் :


💫சிவராத்திரி 4 ஜாமங்களிலும் ஒருவர் செய்யும் பூஜை, அவரை முக்தி பாதைக்கு அழைத்து செல்ல உதவும்.

💫சிவராத்திரியன்று ஆலயங்களுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டில் இருந்தபடியே சிவபெருமானுக்கு மனதில் அபிஷேகம் செய்து சிவனை வழிபடலாம்.

💫மகாசிவராத்திரி தினத்தன்று அபிஷேகத்துக்குரிய பொருட்களை வாங்கி ஆலயத்திற்கு கொடுப்பவர்கள் பரமானந்த நிலையை அடைவார்கள் என்பது ஐதீகம்.

💫சிவராத்திரி தினத்தன்று மாலை சூரியன் மறைந்ததில் இருந்து மறுநாள் காலை சூரியன் உதயமாகும் வரை சிவபூஜை செய்பவர்களுக்கு எல்லா பாக்கியங்களும் கிடைக்கும்.

💫ஒரு வருடம் சிவராத்திரி விரதம் இருப்பது என்பது நூறு அசுவமேத யாகம் செய்த பலனையும், பல தடவை கங்கா ஸ்நானம் செய்த பலனையும் தரவல்லது.

💫சிவராத்திரி அன்று ஒவ்வொரு ஜாம பூஜையின்போது சிவபுராணத்தை வாசிப்பது மிகுந்த நன்மையை தரும்.

சிவனுக்கு உகந்த வில்வத்தின் சிறப்பு :

🌟சிவபெருமானுக்கு வில்வம் ஒன்று சாற்றினால் சிவலோக பதவியும், இரண்டு சாற்றினால் சிவன் அருகில் இருக்கும் பாக்கியம் கிட்டும். மூன்று சாற்றினால் அவனின் அருள் பெறலாம், நான்கு வில்வ இதழ்கள் சாற்றினால் அவனுடன் ஐக்கியமாகலாம் என்பது ஐதீகம்.

🌟பாவங்களை போக்கி புண்ணியங்களை தருவது வில்வம் ஆகும். அஞ்ஞானத்தை வளர்ப்பது வில்வம் ஆகும். வில்வ தழையினால் அர்ச்சனை செய்யும் போது சிவபெருமான் மனம் மகிழ்ந்து சுகம், ஐஸ்வர்யம், புலன்ஒழுக்கம், சந்தானம், வேத, ஆகம, சாஸ்திரஞானம் இவற்றை எல்லாம் அருள்கின்றார்.

🌟வில்வ தழையினால் அர்ச்சனை செய்பவருக்கு கிட்டாத பலன் எதுவுமே கிடையாது. சதுர்த்தி, அஷ்டமி, நவமி, அமாவாசை, பௌர்ணமி, திங்கட்கிழமை, மாதப்பிறப்பு ஆகிய நாட்களில் வில்வ இலைகளை பறிக்கக்கூடாது. பிற நாட்களில் தூய்மையாக பறித்து ஓலைக் கூடையில் வைக்க வேண்டும்.

🌟வில்வத்தில், மகா வில்வம், கொடி வில்வம், கற்பூர வில்வம், சித்த வில்வம் என பல வகைகள் உள்ளன. குறிப்பாக, மூன்று இதழ் கொண்ட வில்வ இலைகளையே பூஜைக்கு பயன்படுத்துகிறோம். ஐந்து மற்றும் ஏழு இதழ்கள் உள்ள வில்வ இலைகளும் உள்ளன.

🌟பூஜைக்குப் பயன்படுத்துகின்ற வில்வத்தை, சூரியோதயத்துக்கு முன்னதாகவே பறித்து வைத்துக்கொள்வது உத்தமம்.

🌟தினமும் சிவனாருக்கு வில்வம் சாற்றி வழிபடுவது சிறப்பு. மகாசிவராத்திரி நாளில், வில்வாஷ்டகம் பாராயணம் செய்து, வில்வம் சாற்றி சிவனாரை தரிசித்தால், ஏழேழு ஜென்மத்துப் பாவங்களும் விலகும் என்பது ஐதீகம்!

வீட்டில் சிவராத்திரி பூஜை செய்யும் முறை :

வீட்டில் சிவராத்திரி பூஜை செய்யும் முறை :

💫வீட்டில் சிவலிங்கம் அல்லது நடராஜர் சிலை இருந்தால் வீட்டிலேயே நான்கு ஜாமமும் பூஜை செய்யலாம். அன்று பகலில் சாப்பிடாமல், மாலையில் பழம், பால் மட்டும் அருந்தி பூஜையைத் துவங்க வேண்டும்.

💫மாலை 6.00, இரவு 9.00, நள்ளிரவு 12.00, அதிகாலை 3.00 மணி ஆகிய நேரங்களில் வில்வ இலை மற்றும் மலர் தூவி தீபாராதனை காட்ட வேண்டும். இடைப்பட்ட நேரத்தில் குடும்பத்துடன் அமர்ந்து சிவாயநம நமசிவாய என மந்திரத்தை சொல்லலாம்.

💫சிவன் தொடர்பான பாடல்கள், கதைகளை பக்தியுடன் ஒருவர் சொல்ல, மற்றவர்கள் கேட்கலாம்.

💫வீட்டிலேயே தேவாரம், திருவாசகம், சிவபுராணம், சிவ ஸ்தோத்திரங்கள் முதலானவற்றைப் படிக்கலாம் அல்லது யாரையாவது படிக்கச் சொல்லி, கேட்கலாம். அமைதியாக சிவ மந்திரங்களை சொல்லியும் தியானிக்கலாம்.

மகாசிவராத்திரி விரதமுறை

மகாசிவராத்திரி விரதமுறை :


✨சிவராத்திரியன்று அதிகாலையில் எழுந்து நீராடி, சூரியன் உதயத்தின் போது காலையில் செய்ய வேண்டிய பூஜைகளை செய்து முடிக்க வேண்டும். அதன் பின்னர் சிவாலயங்களுக்கு சென்று தரிசனம் செய்யலாம்.

✨விரதம் மேற்கொள்ளும்போது உணவு உண்பதை தவிர்க்க வேண்டும். சில கோயில்களில் தொடர்ந்து அன்னதானம் செய்து கொண்டே இருப்பார்கள். நம் உடல் உணவின்றி சிறிது வருந்தும்போது தான் எளிதாக வசப்படும். நாம் சொன்னபடி நம் மனது கேட்கும். அதற்காக தான் விரதமே. அவ்வாறு கேட்கும் மனதை இறைவனிடத்தில் செலுத்தி, அவனோடு சிந்தையில் இரண்டற கலந்து நிற்க வேண்டும்.

✨மறுநாள் காலை குளித்து பூஜைகள் செய்து, மீண்டும் சிவாலயங்கள் சென்று விரதத்தை முடித்து கொள்ளலாம்.

✨சிவராத்திரியன்று சிவாலயத்திற்கு வில்வ இலையுடன் செல்ல வேண்டும். இரவு கடைசி ஜாம பூஜை வரை அங்கே இருக்க வேண்டும். சிவனை வழிபடும்போது சிவாயநம என உச்சரிக்க வேண்டும். அன்று முழுவதும் சாப்பிடக்கூடாது. முடியாதவர்கள் எளிய உணவுகளை எடுத்து கொள்ளலாம்.

✨மறுநாள் காலையில் அன்னதானம் செய்ய வேண்டும். அன்னதானத்துக்கு பிறகே சாப்பிட்டு விரதத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.

மகா சிவராத்திரியின் சிறப்புகள் 20

மகா சிவராத்திரியின் சிறப்புகள் 20


சிவபுராணம், தேவாரம் மற்றும் திருமுறைகள் படிப்பது மிகவும் நல்லது.

1. சிவராத்திரி என்ற சொல் சிவனுடைய ராத்திரி, சிவமான ராத்திரி, சிவனுக்கு இன்பமான ராத்திரி என்று பல வகைப் பொருளை தருகிறது.

2. சிவராத்திரி 4 ஜாமங்களிலும் ஒருவர் செய்யும் பூஜை, அவரை முக்தி பாதைக்கு அழைத்து செல்ல உதவும்.

3. சூரியன், முருகன், மன்மதன், இந்திரன், எமன், சந்திரன், குபேரன், அக்னி பகவான் ஆகியோர் முறைப்படி சிவராத்திரி விரதம் இருந்து பேறு பெற்றுள்ளனர்.

4. சிவராத்திரியன்று ஆலயங்களுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டில் இருந்தபடியே சிவபெருமானுக்கு மனதில் அபிஷேகம் செய்து சிவனை வழிபடலாம்.

5. எறும்பு, நாரை, புலி, சிலந்தி, யானை, எலி போன்றவை கூட சிவபூஜையால் மோட்சம் அடைந்துள்ளன.

6. சிவம் என்ற சொல்லுக்கு மங்களம் தருபவர் என்று பொருள். எனவே எந்த அளவுக்கு ஒருவர் சிவ, சிவ.... என்று உச்சரிக்கிறாரோ, அந்த அளவுக்கு அவர் நன்மை பெறுவார்.

7. சிவராத்திரியன்று திருவிடை மருதூர் மகாலிங்க சுவாமியை வழிபட்டால் மறுபிறவி கிடையாது.

8. சிவராத்திரி தினத்தன்று, தியாகராஜர் என்ற பெயரில் ஈசன் வீற்றிருக்கும தலங்களில் தரிசனம் செய்தால் பாவங்களில் இருந்து விடுபடலாம்.

9. கஞ்சனூரில் ஒரே பிரகாரத்தில் அடுத்தடுத்து 2 தெட்சிணாமூர்த்திகள் உள்ளனர். சிவராத்திரி யன்று இவர்களை வழிபட்டால், சிவஞானம் எளிதில் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

10. சிவபெருமான் லிங்கமாக உருவெடுத்த தினமே சிவராத்திரி என்று ஒரு கருத்து உண்டு.

11. திருவதிகை தலத்தில் உள்ள வீராட்டானேஸ்வரரை சிவராத்திரி தினத்தன்று வழிபட்டால் ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்றும் நீங்கும்.

12. பண்டரிபுரத்தில் உள்ள பாண்டு ரங்கன் "சங்கர மற்றும் நாராயண" வடிவம் என்பார்கள். பாண்டுரங்கன் தலையில் கிரீடத்துக்கு பதில் "பாண லிங்கம்" இடம் பெற்றுள்ளது. சிவராத்திரி தினத்தன்று பாண்டுரங்கனுக்கு நிவேதனம் செய்வதில்லை. அவரும் அன்று சிவராத்திரி விரதம் இருப்பதாக சொல்கிறார்கள்.

13. மகா சிவராத்திரி தினத்தன்று அபிஷேகத்துக்கு உரிய பொருட்களை வாங்கி ஆலயத்துக்கு கொடுப்பவர்கள் பரமானந்த நிலையை அடைவார்கள் என்பது ஐதீகம்.

14. ஊத்துக் கோட்டை அருகில் உள்ள சுருட்டப் பள்ளியில் மட்டுமே சயன கோலத்தில் ஈசன் உள்ளார். சிவராத்திரி தினத்தன்று அங்கு ஈசனை வெள்ளி அங்கியில் தரிசனம் செய்யலாம்.

15. சிவராத்திரி தினத்தன்று சிவபுராணம், தேவாரம் மற்றும் திருமுறைகள் படிப்பது மிகவும் நல்லது.

16. திருவைகாவூர் ஈசனை சிவராத்திரி தினத்தன்று வழிபட்டால், மரண பயம் நீங்கும்.

17. கருட புராணம், கந்தபுராணம், அக்னி புராணம் உள்ளிட்ட பல்வேறு நூல்களில் சிவராத்திரி மகிமை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

18. சிவராத்திரி தினத்தன்று மாலை சூரியன் மறைந்ததில் இருந்து மறுநாள் காலை சூரியன் உதயமாகும் வரை சிவ பூஜை செய்பவர்களுக்கு எல்லா பாக்கியங்களும் கிடைக்கும்.

19. ஒரு வருடம் சிவராத்திரி விரதம் இருப்பது என்பது நூறு அசுவமேத யாகம் செய்த பலனும், பல தடவை கங்கா குளியல் செய்த பலனும் தரவல்லது.

20. சிவராத்திரியன்று கலச பூஜையுடன் லிங்கமும் வைத்து வழிபடுவது கூடுதல் பலன்களைத் தரும்..


மஹா சிவராத்திரி நான்கு ஜாம பூஜையினால் இவ்வளவு சிறப்புகளா...?

மஹா சிவராத்திரி நான்கு ஜாம பூஜையினால் இவ்வளவு சிறப்புகளா...?



*சிவபெருமானுக்குரிய விரதங்களாக மாதசிவராத்திரி, நித்யசிவராத்திரி, யோகசிவராத்திரி, மகாசிவராத்திரி என்று வருடம் முழுவதும் பல சிவராத்திரிகள் வந்தாலும் மகாசிவராத்திரி விரதம் எல்லா சிவராத்திரிகளிலும் சிறப்பானது.*

*மகாசிவராத்திரியன்று சிவபெருமானுக்கு நான்கு ஜாம பூஜைகள் செய்யப்படும். ஒவ்வொரு ஜாமத்தின் போதும் வெவ்வேறு விதமான அர்ச்சனைகள், அபிஷேகங்கள், ஆராதனைகள் செய்யப்படும்.*

முதல் கால பூஜை (6pm-9pm) :

முதல் கால பூஜை பிரம்மன், சிவபெருமானுக்கு செய்யும் பூஜையாகும். இந்த காலத்தில் விரதமிருந்து பூஜிப்பதால் உடலில் இருந்த பிரச்சனைகள் பூரணமாக குணமாகும்.

இந்தக்கால பூஜையில் சிவபெருமானுக்கு பஞ்ச கவ்வியத்தால் (பசும்பால், பசுந்தயிர், பசுநெய், கோமயம், கோசாணம்) அபிஷேகம் செய்து, சந்தனம் பூசி, மஞ்சள் நிற பொன்னாடை அணிவித்தும், வில்வ இலை மற்றும் தாமரைப்பூவால் அலங்காரம் செய்து, பாசிப்பருப்பு பொங்கலை நிவேதனமாக படைத்து, ரிக்வேதம் மற்றும் சிவபுராணத்தை பாராயணம் செய்து நெய் தீபத்துடன் முதல் கால பூஜை நடத்தப்படும்.

இரண்டாவது கால பூஜை (9pm-12Am) :

இரண்டாவது கால பூஜை திருவடி தேடிச் சென்ற பரம்பொருள் விஷ்ணு அவர்களால் சிவபெருமானுக்கு செய்யும் பூஜையாகும். இந்த காலத்தில் விரதமிருந்து பூஜிப்பதால் நோய்கள் தீரும், செல்வம் பெருகும், திருமாலின் அருள் கிடைக்கும்.

இந்த காலத்தில் சிவபெருமானுக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் செய்தும், பச்சைக்கற்பூரம் மற்றும் பன்னீர் சேர்த்து அரைத்து பூசி, வெண்பட்டாடை அணிவித்து அலங்காரம் செய்தும், வில்வ இலை, துளசியால் அலங்காரம் மற்றும் அர்ச்சனைகள் செய்தும், இனிப்பு பாயசத்தை நிவேதனமாக படைத்து, யஜூர் வேதம் மற்றும் எட்டாம் திருமுறையில் கீர்த்தி திருவகவலை பாராயணம் செய்து நல்லெண்ணெய் தீபத்துடன் பூஜை நடைபெறும்.

மூன்றாவது கால பூஜை (12Am-3Am) :

மூன்றாம் கால பூஜை என்பது அம்பாள் அவர்கள் சிவபெருமானுக்கு செய்யும் பூஜையாகும். இந்த காலத்தில் சிவபெருமானுக்கு விரதமிருந்து பூஜிப்பதால் எந்தவித தீய சக்தியும் நம்மை நெருங்காது.

மேலும், இந்த காலத்தில் சிவபெருமானுக்கு தேனால் அபிஷேகம் செய்தும், பச்சைக்கற்பூரம் மற்றும் வில்வ இலையைக் கொண்டு அலங்காரம் செய்தும், சிவப்பு வஸ்திரம் அணிவித்தும், ஜாதிமல்லி பூவினைக் கொண்டு அர்ச்சனைகள் செய்தும், கற்கண்டு சாதத்தை நிவேதனமாக படைத்தும், சாமவேதம் மற்றும் எட்டாம் திருமுறையில் திருவண்டகப் பகுதியை பாராயணம் செய்தும் நெய் தீபத்துடன் பூஜை நடைபெறும்.

நான்காவது கால பூஜை (3Am-6Am) :

முப்பத்து முக்கோடி தேவர்களும், முனிவர்களும், ரிஷிகளும், பூதகணங்களும், மனிதர்களும் என அனைத்து ஜீவராசிகளும் சிவபெருமானை பூஜிப்பது நான்காவது கால பூஜையாகும்.

இந்த காலத்தில் சிவபெருமானுக்கு குங்குமப்பூ சாற்றி, கரும்புச்சாறு மற்றும் பால் அபிஷேகம் செய்தும், பச்சை அல்லது நீல வண்ண வஸ்திரம் அணிவித்தும், நந்தியாவட்டை பூவால் அலங்காரம் செய்தும், சுத்தமான அன்னத்தை நிவேதனம் படைத்து, அதர்வண வேதம் மற்றும் எட்டாம் திருமுறையில் போற்றித் திருவகவலை பாராயணம் செய்து தூப தீப ஆராதனைகளுடன் பூஜை நடைபெறும்.

*எனவே, இந்த மகாசிவராத்திரியன்று நான்கு ஜாம பூஜைகளிலும் பங்கேற்று சிவபெருமானின் அருளைப் பெற்றிடுவோம் .*

*🕉️ ஓம் நமசிவாய🙏.*

திங்கள், 20 ஜனவரி, 2025

வயிற்று புண்களை குணப்படுத்தும் ஆற்றல் கொண்ட கம்பு.

வயிற்று புண்களை குணப்படுத்தும் ஆற்றல் கொண்ட கம்பு.


மனச் சோர்வு இருந்தால் உடல் சோர்வு உண்டாகும். அதுபோல் வெயிலில் அதிகம் அலைகிறவர்கள், கடின வேலை செய்பவர்கள் அதிகம் சோர்வடைகின்றனர். இவர்கள் புத்துணர்வு பெற கம்பை கூழாக்கி, அதனுடன் மோர் கலந்து மதிய வேளையில் அருந்தி வந்தால் உடல் சோர்வு நீங்கி புத்துணர்வு கிடைக்கும்.

* அஜீரணக் கோளாறு கொண்டவர்கள் கம்பங் கஞ்சியை அருந்தி வந்தால் அஜீரணக் கோளாறுகள் நீங்கி நன்கு பசியெடுக்கும். வயிற்றில் புண்கள் உண்டானால் வாயிலும் புண்கள் ஏற்படும். மேலும் வயிற்று புண்களை குணப்படுத்தும் குணம் கம்புக்கு உண்டு. 
 
* கம்புடன் அரிசி சேர்த்து நன்கு குழையும்படி சோறாக்கி மதிய உணவில் சேர்த்துக் கொண்டால் குடல்புண், வயிற்றுப்புண், வாய்ப்புண் குணமாகும். 
 
* உடல் வலுவடைய கம்பு மிகச் சிறந்த உணவாகும். அடிக்கடி கம்பங்கஞ்சி சாப்பிட்டு வந்தால் உடல் வலுவடையும். 
 
* கண் நரம்புகளுக்கு புத்துணர்வு கொடுத்து பார்வையை தெளிவாக்கும். இதயத்தை வலுவாக்கும். சிறுநீரைப் பெருக்கும். நரம்புகளுக்கு புத்துணர்வைக் கொடுக்கும். இரத்தத்தை சுத்தமாக்கும். 
 
* உடலில் தேவையற்ற நீரை வெளியேற்றும். நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டும். தாதுவை விருத்தி செய்யும். இளநரையைப் போக்கும். 
 
அதிகமாக கம்பங்கஞ்சி அருந்தினால் சில சமயங்களில் இருமல், இரைப்பு போன்றவற்றை உண்டாக்கும். அதனால் அளவோடு சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழலாம்.

நீரழிவு, கொலஸ்டரோலை உடம்பிலிருந்து முற்றாக அகற்றும் பூசணி விதை!!!

நீரழிவு, கொலஸ்டரோலை உடம்பிலிருந்து முற்றாக அகற்றும் பூசணி விதை!!!
நீரழிவு, கொலஸ்டரோலை உடம்பிலிருந்து முற்றாக அகற்றும் பூசணி விதை!!!



ப்ரோஸ்டேட் வீக்கம், நீரிழவு மற்றும் கொலஸ்ட்ரால் போன்ற மூன்றுமே ஆண்களை பாதிக்கும் நோய்களாகும். இந்த மூன்று நோய்களையும் குணமாக்கும் சக்தி பூசணிக்காயில் உள்ளது. பூசணிக்காய் ஒரு சுவையான காய் மற்றும் பல்வேறு நன்மைகளை கொண்டது. ஆனால் அதனுடைய விதை மிகவும் சக்தி வாய்ந்தவை.

பூசணிக்காய் விதையில் பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. அத்துடன் பல்வேறு சுகாதார நலன்களை உள்ளடக்கியது. இந்த விதையில் மிகவும் முக்கியமான குயூகர்பிட்டேசின் உள்ளது. இது புரோஸ்டேட் விரிவைக் குணப்படுத்துவதுடன் மற்ற பிரச்சனைகளையும் குணமாக்கும்.

புரோஸ்டேட் விரிவு, சர்க்கரை நோய் மற்றும் அதிக கொலஸ்ட்ரால் இவற்றை குணமாக்க கூடிய ஒரு பானத்தை எவ்வாறு தயாரிக்க வேண்டும் என்று பார்க்கலாம்...

 பூசணிக்காய் விதை டீ இது மிகவும் எளிதான ஒன்று தயாரிப்பதற்கும், உபயோகப்படுத்துவதற்கும்.இதற்குத் தேவையான பொருட்களை பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:
ஒரு கப் தண்ணீர். ஒரு கையளவு பூசணி விதை.

நன்மைகள் :

பூசணி விதை ஒரு சிறந்த சிறுநீர் பிரிப்பு (அதிகமான சிறுநீரை வெளியேற்றும்) ஆகும். இவ்வாறு சிறுநீரை வெளியேற்றுவதால் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும். வீக்கத்தை குணமாக்கக் கூடிய அலர்ஜி நீக்கியாகவும் செயல்படுகிறது.

பூசணி தேநீர் தயாரிக்கும் முறை : 

இந்த டீயைத் தயாரிக்க செய்ய வேண்டியது பூசணி விதையை பொடியாக்கி ஒரு பானை நீரில் கலக்க வேண்டும். இந்தக் கலவையை 15 நிமிடங்கள்கொதிக்க விட வேண்டும். பின்பு அதை வடிகட்டி விட வேண்டும். இப்போது பூசணி விதை டீ ரெடி. இதை நீங்கள் பருகலாம். இவ்வாறு செய்து தினமும் ஒரு கப் குடித்து வந்தால் உடலில் எந்த பிரச்னையும் வராது!!!