ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?
பிறப்பே எடுக்காத ( ஆதியும் அந்தமும் இல்லா த பரம்பொருளுக்கு) சிவபெருமா னுக்கு உரிய நட்சத்திரம் திருவாதிரை என்கிறார்களே எப்படி ?
தமிழ் மொழியில் திருவாதிரை என்று கூறப் படும் நட்சத்திரத்திற்கு வடமொழி யில் ஆர்த்ரா என்று பெயர். இதுவே ஆருத்ரா எனப் படுகிறது.
மார்கழி மாத திருவாதிரைநட்சத்திர நாளில் எல்லா சிவாலயங்களில் ஆருத்ரா தரிசனம் சிறப்பாக நடைபெறும்.
பிறப்பே எடுக்காத சிவபெரு மானுக்கு பிறந்த நட்சத்திரம் திருவாதிரை என்கிறார்களே ?
"பிறவா யாக்கைப் பெற்றோன் பெரியோன்." என்று சங்க இலக்கியமான சிலப்பதிகாரம் சிவ பெருமானைக் குறிக்கிறது.
சிவபெருமானின் நட்சத்திரம் திருவாதிரை ஆனதுபற்றி புராணச் செய்திகள் உள்ளன.
சேந்தனார் வீட்டுக்கு களி யுண்ண நடரா ஜப் பெருமான் வந்த அந்த தினம்,ஒரு மார்கழி மாத திருவாதிரை நாள் இதை உணர்த்தும் வகையில், இன்றும் ஆதிரை நாளில் தில்லை நடராஜப் பெருமானுக்கு களி படைக்கப் படுகி றது. இதனால் சிவ பெருமானின் நட்சத்திரம் திருவாதிரை ஆனது.
ஒரு காலத்தில், திரேதாயுகா என்ற பெண் பார்வதி தேவியின் தீவிர பக்தையாக இரு ந்தா ள். திரேதாயுகா வுக்குத் திருமணம் நடந்தது. அக்காலத்தில் திருமணமான நான்காவது நாளில்தான் சாந்தி முகூர்த்தம் நடக்கும்
ஆனால் திருமணமான மூன்றாவது நாளிலே யே திரேதாயுகாவின் கணவன் இறந்து விட்டான்.
திரேதாயுகா அலறி துடித்து பார்வதிதேவியே உன் பக்தையான என்னை இப்படி சோதிக்க லாமா, உன்னை இவ்வளவு காலம் வணங்கி என்ன பயன் என்று கூறிக் கதறி அழுதாள்.
அப்போது கயிலாயத்தில் சிவன் அருகில் அம ர்ந்திருந்த பார்வதி, திரேதாயுகாவின் அலற லைக் கேட்டு அவள் கணவனுக்கு உயிர்ப் பிச்சையளிக்க சபதம் செய்தாள். அவளது சபதத்தைக் கேட்டு அதிர்ந்து போன சிவன் உடனே எமலோகத்தை ஒரு பார்வை பார்த்தார். இதைக் கண்டு பதறிப்போன எமன் திரேதாயு காவின் கணவனுக்கு மீண்டும் உயிர் கொடுத்தார்.
அதன்பின் பார்வதியும் பரமசிவனும் திரேதாயுகா வுக்கும் அவள் கணவனுக்கு ம் தரிசனகாட்சி கொடுத்து ஆசீர்வதித்தார்கள்
இந்த நிகழ்ச்சி ஒரு மார்கழிமாத திருவாதிரை நட்சத்திர நாளில் நடந்தது. இந்த தரிசனத்து க்கு ஆருத்ரா தரிசனம் என்று பெயர் ஏற்பட்டது.
சேந்தனாருக்கும் திரேதாயுகாவுக்கும் நேரில் தோன்றி தரிசனம் தந்த அந்த திருவாதிரை நட்சத்திர நாளையே சிவபெ ருமானாரின் நட்சத்திரமாக அதாவது ஆருத்ரா தரிசனமாக கொண்டாடப் படுகிறது.
ஓம் நமசிவாய....
திருச்சிற்றம்பலம்...
0 Comments: